Monday, March 12, 2007

இன்சாட் 4-பி - வெற்றிகரமாக பறந்தது

இந்தியாவிலேயே தயாரிக் கப்பட்ட செயற்கைகோள் வரிசையில் புதிதாகஉரு வாக் கப்பட்ட 13-வது செயற்கை கோள் இன்சாட் 4-பி.

தகவல் தொடர்பு மற்றும் வீடுகளுக்குநேரடி யாக டெலிவிசன் ஒளிபரப்புக் காகவும் (டிடிஎச்)இந்தசெயற்கைகோள் உரு வாக்கப்பட்டது. 12 டிரான்ஸ் பாண்டர்களை கொண்ட இன்சாட்4-பி செயற்கை கோளின் எடை 3025 கிலோ.

இந்த செயற்கைகோள் தென் அமெரிக்காவின்பிரஞ்சு கயானாவில்ஏவுகளத்தில் இருந்துஏரியான்-5 என்ற ஐரோப்பிய ராக்கெட் மூலம் நேற்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

ஆனால் ராக்கெட் புறப்படுவதற்கு 7 நிமிடங்களுக்குமுன் ஏற்பட்ட கோளாறு காரணமாகசெயற்கை கோளை செலுத்துவது ஒத்திவைக்கப்பட்டது.

இதை அடுத்து கோளாறு சரி செய்யப்பட்டது. இன்று அதிகாலை இன்சாட்4பி செயற்கை கோள் ஏரியான் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இதே ஏரியான் ராக்கெட் ஸ்கைநெட்-5-ஏ என்ற செயற்கை கோளையும் எடுத் துச்சென்றது. இந்தசெயற்கை கோள் இங்கிலாந்தின் ராணுவ தகவல் தொடர்புக்காகஅனுப்பப்பட்டுள்ளது.

ஏரியான் ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்த ஒரு சில நிமிடங்களில் அதில்இருந்து இன்சாட் செயற்கைகோள் தனியாக பிரிந்து அதன் சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.

இன்சாட் செயற்கை கோளில் இருந்து பெங்களூரில் உள்ள ஹசன் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு சிக்னல்கள் கிடைத்தன.இந்த செயற்கை கோள் விண்வெளியில் 12 ஆண்டுகள் செயல்படும். இன்சாட்4-பி செயற்கைகோள் வெற்றிகரமாக பறக்க விடப்பட்டது பற்றி இந்திய விண்வெளித்துறை (இஸ்ரோ) தலைவர் மாதவன் நாயர் கூறும்போது, இந்திய செயற்கைகோள்கள் வரலாற் றில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சி என்று கூறினார். இந்திய நிபு ணர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

செயற்கைகோள் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

0 Comments: