Saturday, April 7, 2007

செய்தி: கால நிலை மாற்றங்கள்

கால நிலை மாற்றத்தால் கோடிக்கணக்கானவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை, அடுத்து வரும் தசாப்தங்களில், காலநிலை மாற்றத்தால், பாதிக்கப்படும் என்று உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கால நிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழுவின் அறிக்கை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் வறிய நாடுகளில் உள்ள மக்களே கால நிலை மாற்றத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படுவார்கள் என்று, அந்தக் குழுவின் தலைவர் ராஜேந்திர பச்சௌரி எச்சரித்துள்ளார்.

உலகில் உள்ள அனைத்துக் கண்டங்களையும், இந்தக் கால நிலை மாற்றம் பாதிக்கும் என்பதற்கான ஆதாரமான தரவுகளை, முதற் தடவையாக விஞ்ஞானிகள் முன்வைத்திருப்பதாக, இந்த அறிக்கையைத் தயாரிக்க உதவிய மற்றுமொரு நிபுணரான, மார்ட்டின் பாரி, செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்.

ஆசியாவின் பெரிய டெல்டா பிரதேசங்கள், சகாராவுக்குத் தெற்கே உள்ள ஆபிரிக்க பிராந்தியம், சிறிய தீவுகள் மற்றும் துருவப் பிராந்தியம் ஆகியவற்றையே இந்த மாற்றங்கள் மிகவும் அதிகமாக பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


- பிபிசி-தமிழ்

0 Comments: